"உளூ
ஈமானின் பாதி , அல்ஹம்துலில்லாஹ் சொல்வது {அமல்களின்} தராசை நன்மைகளால் நிரம்பிவிடும் , சுபஹானல்லாஹ் வும் அல்ஹம்துலில்லாஹ்வும் வானம் , பூமிக்கிடையே
உள்ள இடைவெளியை நன்மையால் நிரப்பிவிடும் , தொழுகை பிரகாசம் . ஸதகா ஆதாரம் , பொறுமை
வெளிச்சம் , குர் ஆன் உங்களுக்குச்
சாதகமான பாதகமான அத்தாச்சி . குர் ஆணை ஓதி
அதன்படி செயல்பட்டால் , அது உங்களது வெற்றிக்குக்
காரணமாகும் , இல்லையெனில் , நீங்கள் தண்டிக்கப்படுவதற்குகாரணமாகி விடும் "என்று ரஸூலுல்லாஹி {ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் }அவர்கள் கூறியதாக ஹஸ்ரத் அபூமாலிக் அஷ் அரி {ரலியல்லாஹு
அன்ஹு } அவர்கள் அறிவித்துள்ளார்கள் .
தெளிவுரை
:- ஈமானால்
உள்ளத்திலுள்ள ஷிர்க் குப்ரு என்ற
அசுத்தம் நீங்குவதுபோல் , உளுவாள் உடல் உறுப்புக்களின் அசுத்தம்
நீங்குகிறது என்பதால் இந்த ஹதீஸில் உளூ
ஈமானின் பாதி என்றும் கூறப்பட்டுள்ளது ஒளி
. இருளை விரட்டி விடுவதைப்போல்
தொழுகை பாவங்கள் மற்றும் மனக்கேடானவற்றை விட்டும் தடுப்பதால் தொழுகையை ஒளி என்று சொல்லப்பட்டுள்ளது
மற்றொரு பொருள் : தொழுகையால் தொழுபவரின் முகம் கியாமத் நாளன்று ஒளிமயமாக இருக்கும் , உலகத்திலும் தொழுகையாளிகளின் முகம் செழிப்பாக இருக்கும்
. கப்ரு மற்றும் கியாமத்தின் இருளில் தொழுகை ஒளியாக இருக்கும் என்று தொழுகைக்கு மூன்றாவது கருத்தும் கூறப்பட்டுள்ளது . தர்மம் ஆதாரம் என்பதன் கருத்தாவது : பொருள் மனிதனுக்கு விருப்பமான ஒன்றாகும் அதை அல்லாஹுதஆலாவின் பாதையில்
செலவிடுவதால் அது அவர் ஈமானில்
உண்மையாளர் என்பதற்கு ஆதாரமாகிவிடும் என்பதாகும் பொறுமை
ஒளி என்பதன் கருத்து , பொறுமையாளர் , அல்லாஹுத்தஆலாவின் கட்டளைகளை பூர்த்தி செய்தும் அவனுக்கு மாரு செய்யாமலும் சிரமங்களை
சகித்தும் வருபவர் , தமக்குள் ஹிதாயத்தின் ஒளியை வைத்துக் கொண்டுள்ளார் என்பதாம்
No comments:
Post a Comment