அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ
அகாயிதா என்றால் கொள்கைகள் என்று பொருள் .
இந்த காணொளியில் நாம்
அல்லாஹுவின் மீது எப்படி ஈமான் கொள்ளவேண்டும் ?
ஈமானின் நிபந்தனைகள் எத்தனை ?
ஈமான் நிலையாக (இருப்பதற்கான )நிபந்தனைகள் என்ன ?
ஈமானினால் என்ன பலன் ? பற்றி பார்க்கபோகிறோம்
அல்லாஹுவின் மீது எப்படி ஈமான் கொள்ளவேண்டும் ?
அல்லாஹு ஒருவன் ; அவனுக்கு யாரும் இணை கிடையாது .எல்லாவிதமான பெருமைகளும் திறமைகளும் அவனுக்கே உரியவை ;அவன் குறை எதுவும் இல்லாத பரிசுத்தமானவன் ;அவனுக்கு யாருடைய தேவையும் இல்லை ; ஆனால் எல்லோரும் அவன் பக்கம் தேவையுடையவர்களாக இருக்கிறார்கள் ;அவனே எல்லா உலகங்களையும் படைத்தவன் ;அவன் நித்தியஜீவன் ; எல்லா பொருள்களையும் பற்றியும் அவன் அறிவான் ;அவன் எல்லாவற்றையும் ஆட்டிப்படைக்கும் சக்தி பெற்றவன் ;எல்லா வற்றின் மீதும் ஆற்றல் பெற்றவன் ;நினைத்ததை நடத்திமுடிப்பவன் ;எல்லாமே அவனுடைய நாட்டப்படியும் அவனுடைய விதிப்படியும் நடக்கும் ;அவன் என்றும் இருந்து வருகின்றான் ,இனி என்றும் இருப்பான் ;அவனே வணங்கப்பட வேண்டியவன் அவனைத்தவிர மற்ற எவருமே வணக்கத்திற்கு உரியவர்கள் ஆகமாட்டார்கள் .இந்த முறையில் அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்ளவேண்டும் .
ஈமானின் நிபந்தனைகள் எத்தனை ?
ஈமானின் நிபந்தனைகள் 7 ஏழு
1. தானே விரும்பி ஈமான் கொள்வது
2.நம்மை விட்டு மறைவாக இருப்பதை ஈமான் கொள்வது
3.மறைவான விஷயங்களை அல்லாஹ் மட்டுமே அறிந்தவன் என்று உறுதியாக நம்புவது .
4.அல்லாஹுத்தஆலா எதை ஹலால் (ஆகுமானது )என்று கூறியிருக்கிறானோ அதை ஹலால் என்று அறிந்து கொள்வது.
5.அல்லாஹுத்தஆலா எதை ஹாரம் (ஆகாதது )என்று சொல்லியிருக்கிறானோ அதை ஹராம் என்று அறிந்து கொள்வது .
6. அல்லாஹ்வின் வேதனையை பற்றி பயந்து கொண்டே இருப்பது .
7.அல்லாஹ்வின் ரஹ்மத்தை (அருளை) விரும்புவது .
ஈமான் நிலையாக (இருப்பதற்கான )நிபந்தனைகள் என்ன ?
1. ஈமான் கொண்டதால் மகிழ்ச்சி அடைவது .
2. ஈமான் போய்விடுமோ என்று ஆசிக் கொண்டே இருப்பது .
3. ஈமானை கெடுக்கக் கூடியவைகளை விட்டு ஒதுங்கியே இருப்பது .
ஈமானினால் என்ன பலன் ?
ஈமானுடன் இறப்பவர் நிரந்தரமாக வேதனையை (அதாபை )விட்டும் தப்பித்து எப்போதும் சொர்க்கத்தில் இருப்பார்
Subscribe: https://bit.ly/32GrJwI
Telegram: https://t.me/azeezislamicblog
Facebook: https://www.facebook.com/azeezislamicblog
Website: https://azeezislamicblogs.blogspot.com/
hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam
Subscribe to:
Post Comments (Atom)
-
ரமலான் பிறை 1 - 10 வரை ஓதும் துஆ اَللّٰهُمَ ارْحَمْنَا بِرَحْمَتِكَ يَآ اَرْحَمَ ا لرَّاحِمِيْنَ அல்லாஹும்மர்ஹம்னா பிரஹ்மத்திக்க யா அர்ஹம...
-
இஸ்லாமிய மார்க்கத்தில் கடமையான தொழுகைகளுக்கு அடுத்தபடியாக உபரியான (நஃபில்) தொழுகைகள் ஒரு இறை நம்பிக்கையாளரை இறைவனுக்கு மிக நெருக்கமானவராக ம...
-
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு. இஸ்லாத்தில் ஃபர்ளான தொழுகைகளுக்குப் பிறகு மிக உயர்ந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சிறப்பு ...
No comments:
Post a Comment