ஹஜ்ரத்
ஷத்தாத் ( ரலியல்லாஹு அன்ஹு )அவர்கள் அறிவிப்பதாவது
: எனது தந்தையர் ஹஜ்ரத் ஷத்தாத் (ரலி அல்லாஹு அன்ஹு
)அவர்கள் கீழ்காணும் சம்பவத்தைக் கூறினார்கள்
அச்சம்பவத்தின் போது
என் தந்தையுடன் இருந்து ஹஜ்ரத் உபாதா( ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அதை உண்மைப்படுத்தினார்கள் .
நாங்கள் ஒருமுறை ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்) அவர்கள் ,"உங்களில் எவரேனும் அந்நியர் (முஸ்லிமல்லாதவர் )இருக்கின்றனரா ?" என்று வினவினார்கள் . ஒருவரும் இல்லை,என்று நாங்கள்
பதிலளித்தோம். பிறகு கதவை மூடச் சொல்லி
விட்டு , உங்கள் கைகளை உயர்த்தி (லாயிலாஹ
இல்லல்லாஹு )என்று சொல்லுங்கள்
!" என்று சொன்னார்கள் . நங்கள் சிறிது நேரம் கைகளை உயர்த்திய வண்ணம் இருந்தோம்
,(கலிமாவையும் கூறினோம் )பின்பு நபி ( ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தங்கள்
கரத்தைத் தாழ்த்தி
அல்ஹம்துலில்லாஹ் என்று கூறிய பின் "யாஅல்லாஹ்" நீ இக்கலிமாவைத் தந்து
என்னை அனுப்பியுள்ளாய் ! இதை(எத்திவைக்க ) எனக்குக்
கட்டளையிட்டுள்ளாய் ! இக்கலிமாவுக்காக சொர்க்கத்தை வாக்களித்துள்ளாய் !நீ வாக்குமீறாதவன் "என்றுசொன்னார்கள் , பிறகு எங்களை
பார்த்து ,"அல்லாஹ் உங்களை மன்னித்து விட்டான் என்றான் நற்செய்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள் !" என மொழிந்தார்கள் . (முஸ்னத்
அஹ்மத் ,தப்ரானி , பஸ்ஸார் ,மஜ்மவுஸ்ஸவாயித் )
No comments:
Post a Comment