Thursday, September 16, 2021

இக்லாஸ் நிய்யத் - எண்ணத்தைச் சரிசெய்தல் | தினம் ஒரு நபி மொழி - 41


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ இக்லாஸ் நிய்யத் - எண்ணத்தைச் சரிசெய்தல் ٤- عَنْ عَائِشَةَ ؓ قاَلَتْ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: يَغْزُوْ جَيْشٌ الْكَعْبَةَ، فَاِذَا كَانُوْا بِبَيْدَاءَ مِنَ اْلاَرْضِ يُخْسَفُ بِاَوَّلِهِمْ وَآخِرِهِمْ، قَالَتْ: قُلْتُ: يَا رَسُوْلَ اللهِ ﷺ كَيْفَ يُخْسَفُ بِاَوَّلِهِمْ وَآخِرِهِمْ وَفِيْهِمْ اَسْوَاقُهُمْ وَمَنْ لَيْسَ مِنْهُمْ؟ قَالَ: يُخْسَفُ بِاَوَّلِهِمْ وَآخِرِهِمْ، ثُمَّ يُبْعَثُوْنَ عَلَي نِيَّاتِهِمْ. رواه البخاري، باب ما ذكر في الاسواق، رقم:٢١١٨ 4.புனித கஃபத்துல்லாஹ்வைத் தாக்கும் எண்ணத்துடன் ஒரு படை புறப்படும். அப்படை செடி, கொடிகளற்ற ஒரு மைதானத்தை அடைந்ததும் அவர்கள் அனைவரையும் பூமியில் புதைந்துவிடச் செய்யப்படும்'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொன்னபோது, யாரஸூலல்லாஹ், அனைவரும் எவ்வாறு பூமியில் புதைந்து போவார்கள்? அங்கு கடைவீதியில் வியாபாரம் செய்வோரும் இருப்பார்கள், அப்படையில் சேராதவர்களும் இருப்பார்களே!'' என ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்டதற்கு, அனைவரும் புதைந்துவிடுவர், பிறகு தத்தமது எண்ணத்திற்கேற்ப அவர்கள் எழுப்பப்படுவார்கள். அதாவது, கியாமத் நாளில் அவர்களுடைய எண்ணத்திற்கேற்ப அவர்களுடன் நடந்து கொள்ளப்படும்'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி) Subscribe: https://bit.ly/32GrJwI Telegram: https://t.me/azeezislamicblog Facebook: https://www.facebook.com/azeezislamicblog Website: https://azeezislamicblogs.blogspot.com/ hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam

No comments:

Post a Comment