Friday, September 17, 2021

மூன்றாம் கலிமாவின் சிறப்பு | தினம் ஒரு நபி மொழி - 42


மூன்றாம் கலிமாவின் சிறப்பு அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ ஹஜ்ரத் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது ." இரண்டு கலிமாக்கள் (ஓதுவதற்கு ) நாவிற்கு மிக லேசானவையாகவும் ,அமல்கள் நிறுக்கப்படும் தராசில் மிகக் கனமுடையவையாகவும் ,ரஹ்மானாகிய அல்லாஹுவுக்கு மிகக் நேசமுள்ளவையாகவும் இருக்கின்றன . அவை ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி , ஸுப்ஹானல்லாஹில் அளீம் என்பவையாகும் " என ரஸூலுல்லாஹி (ஸல் ) அவர்கள் அருளினார்கள் . நூல் { புகாரீ , முஸ்லீம் } Subscribe: https://bit.ly/32GrJwI Telegram: https://t.me/azeezislamicblog Facebook: https://www.facebook.com/azeezislamicblog Website: https://azeezislamicblogs.blogspot.com/ hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam

Thursday, September 16, 2021

இக்லாஸ் நிய்யத் - எண்ணத்தைச் சரிசெய்தல் | தினம் ஒரு நபி மொழி - 41


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ இக்லாஸ் நிய்யத் - எண்ணத்தைச் சரிசெய்தல் ٤- عَنْ عَائِشَةَ ؓ قاَلَتْ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: يَغْزُوْ جَيْشٌ الْكَعْبَةَ، فَاِذَا كَانُوْا بِبَيْدَاءَ مِنَ اْلاَرْضِ يُخْسَفُ بِاَوَّلِهِمْ وَآخِرِهِمْ، قَالَتْ: قُلْتُ: يَا رَسُوْلَ اللهِ ﷺ كَيْفَ يُخْسَفُ بِاَوَّلِهِمْ وَآخِرِهِمْ وَفِيْهِمْ اَسْوَاقُهُمْ وَمَنْ لَيْسَ مِنْهُمْ؟ قَالَ: يُخْسَفُ بِاَوَّلِهِمْ وَآخِرِهِمْ، ثُمَّ يُبْعَثُوْنَ عَلَي نِيَّاتِهِمْ. رواه البخاري، باب ما ذكر في الاسواق، رقم:٢١١٨ 4.புனித கஃபத்துல்லாஹ்வைத் தாக்கும் எண்ணத்துடன் ஒரு படை புறப்படும். அப்படை செடி, கொடிகளற்ற ஒரு மைதானத்தை அடைந்ததும் அவர்கள் அனைவரையும் பூமியில் புதைந்துவிடச் செய்யப்படும்'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொன்னபோது, யாரஸூலல்லாஹ், அனைவரும் எவ்வாறு பூமியில் புதைந்து போவார்கள்? அங்கு கடைவீதியில் வியாபாரம் செய்வோரும் இருப்பார்கள், அப்படையில் சேராதவர்களும் இருப்பார்களே!'' என ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்டதற்கு, அனைவரும் புதைந்துவிடுவர், பிறகு தத்தமது எண்ணத்திற்கேற்ப அவர்கள் எழுப்பப்படுவார்கள். அதாவது, கியாமத் நாளில் அவர்களுடைய எண்ணத்திற்கேற்ப அவர்களுடன் நடந்து கொள்ளப்படும்'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி) Subscribe: https://bit.ly/32GrJwI Telegram: https://t.me/azeezislamicblog Facebook: https://www.facebook.com/azeezislamicblog Website: https://azeezislamicblogs.blogspot.com/ hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam

Wednesday, September 1, 2021

இல்மு திக்ரு - குர்ஆன், ஹதீஸின் மூலம் ஏற்படும் தாக்கங்கள் | தினம் ஒரு நபி மொழி -39


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ இல்மு திக்ரு - குர்ஆன், ஹதீஸின் மூலம் ஏற்படும் தாக்கங்கள் ٥٦- عَنْ أَبِي هُرَيْرَةَؓ يَبْلُغُ بِهِ النَّبِيَّ ﷺ قَالَ: إِذَا قَضَي اللهُ اْلاَمْرَ فِي السَّمَاءِ ضَرَبَتِ الْمَلاَئِكَةُ بِأَجْنِحَتِهَا خُضْعَاناً لِّقَوْلِهِ كَأَنَّهُ سِلْسِلَةٌ عَلَي صَفْوَانٍ فَإِذَا فُزِّعَ عَنْ قُلُوبِهِمْ قَالُوا: مَاذَا قَالَ رَبُّكُمْ؟ قَالُوا الْحَقَّ وَهُوَ الْعَلِيُّ الْكَبِيرُ. رواه البخاري باب قول الله تعالي ولا تنفع الشفاعة عنده الا لمن اذن لها الاية رقم:٧٤٨١ அல்லாஹ் ஒரு காரியத்தைச் செயல்படுத்த விரும்பும் போது, வானத்தில் மலக்குகள் அல்லாஹ்வின் கட்டளையின் பயம், திடுக்கத்தால், நடுங்கியவர்களாகத் தங்கள் இறக்கைகளை அசைக்கிறார்கள். வழுவழுப்பான பாறையில் சங்கிலியால் அடித்தால் எழும் ஒலியைப் போல் அல்லாஹ்வின் கட்டளை மலக்குகளுக்குக் கேட்கிறது. மலக்குகளின் உள்ளத்திலிருந்து திடுக்கம் நீக்கப்பட்டதும், அவர்கள் தமக்குள், ஒருவர் மற்றவரிடம், உங்கள் இரட்சகன் என்ன கட்டளையிட்டான்?' என்று கேட்க, சத்தியத்தைக் கட்டளையிட்டான், அவன் உண்மையிலேயே உயர்ந்தவன், யாவரையும் விடப் பெரியவன்' என்று பதில் கூறுகின்றனர்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி) Subscribe: https://bit.ly/32GrJwI Telegram: https://t.me/azeezislamicblog Facebook: https://www.facebook.com/azeezislamicblog Website: https://azeezislamicblogs.blogspot.com/ hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam

Arabic Alphabet Letter | Noorain Qaid |தன்வின் மற்றும் நூனேஸாக்கின் சட்டம் -2 பாடம் -12


Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh Arabic Alphabet Letter | Noorain Qaid | தன்வின் மற்றும் நூனேஸாக்கின் சட்டம் -2 பாடம் -12| Learn Quran Tajweed பாடம் 12 you have any questions comment below... குரானை எளிய முறையில் தஜ்வீடுடன் ஓதுவதற்கு இந்த சேனல்லை அறிமுகம் செய்கிறோம். ஏதேனும் கேள்வி அல்லது சந்தேகம் இருந்த்த்தால் கீழே Comment செய்யவும். Makhraj https://bit.ly/3CqqkuH Subscribe: https://bit.ly/32GrJwI Telegram: https://t.me/azeezislamicblog Facebook: https://www.facebook.com/azeezislamicblog Website: https://azeezislamicblogs.blogspot.com/ #arbicletters #azeezislamicblog #learnarabic

Thursday, August 19, 2021

தினம் ஒரு இறைவசனம் | அல்குர்ஆன் - 1

 🌹அல்லாஹ்வின் நல்லடியார்களே அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு🌹


(தினம் ஒரு இறைவசனம்)📖


இன்றைய இறைவசனம்

👇


🕋



مَلِكِ النَّاسِۙ‏

(அவனே) மனிதர்களின் அரசன்;


(அல்குர்ஆன் : 114:2)

🤲🏻கேட்டதின்படி அமல் செய்ய அல்லாஹ்த்தாலா நம் அனைவருக்கும் அருள் புரிவானாக ஆமின்....  🤲🏻


இன்ஷா அல்லாஹ்...


அஜீஜ் இஸ்லாமிக் குழுவில் சேரவிருப்பம் உள்ளவர் கிழே உள்ள   லிங்கின் மூலம் சேரலாம் இன்ஷா அல்லாஹ்....

👇


📌https://chat.whatsapp.com/KHzCvwTqDDrBCqyWox0atO


☪️அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

Sunday, August 8, 2021

Arabic Alphabet Letter | Noorain Qaid |தன்வின் மற்றும் நூனேஸாக்கின் சட்டம் -1 பாடம் -11

                           



Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh Arabic Alphabet Letter | Noorain Qaid | தன்வின் மற்றும் நூனேஸாக்கின் சட்டம் -1 பாடம் -11| Learn Quran Tajweed பாடம் 11 you have any questions comment below... குரானை எளிய முறையில் தஜ்வீடுடன் ஓதுவதற்கு இந்த சேனல்லை அறிமுகம் செய்கிறோம். ஏதேனும் கேள்வி அல்லது சந்தேகம் இருந்த்த்தால் கீழே Comment செய்யவும். Makhraj https://bit.ly/3CqqkuH Subscribe: https://bit.ly/32GrJwI Telegram: https://t.me/azeezislamicblog Facebook: https://www.facebook.com/azeezislamicblog Website: https://azeezislamicblogs.blogspot.com/ #arbicletters #azeezislamicblog #learnarabic

Wednesday, July 14, 2021

ஈமான் பாடம்-8 | Tamil Bayan | Islamic Bayan Tamil | கொள்கைகள் -8


அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ அகாயிதா என்றால் கொள்கைகள் என்று பொருள் . இந்த காணொளியில் நாம் அல்லாஹுவின் மீது எப்படி ஈமான் கொள்ளவேண்டும் ? ஈமானின் நிபந்தனைகள் எத்தனை ? ஈமான் நிலையாக (இருப்பதற்கான )நிபந்தனைகள் என்ன ? ஈமானினால் என்ன பலன் ? பற்றி பார்க்கபோகிறோம் அல்லாஹுவின் மீது எப்படி ஈமான் கொள்ளவேண்டும் ? அல்லாஹு ஒருவன் ; அவனுக்கு யாரும் இணை கிடையாது .எல்லாவிதமான பெருமைகளும் திறமைகளும் அவனுக்கே உரியவை ;அவன் குறை எதுவும் இல்லாத பரிசுத்தமானவன் ;அவனுக்கு யாருடைய தேவையும் இல்லை ; ஆனால் எல்லோரும் அவன் பக்கம் தேவையுடையவர்களாக இருக்கிறார்கள் ;அவனே எல்லா உலகங்களையும் படைத்தவன் ;அவன் நித்தியஜீவன் ; எல்லா பொருள்களையும் பற்றியும் அவன் அறிவான் ;அவன் எல்லாவற்றையும் ஆட்டிப்படைக்கும் சக்தி பெற்றவன் ;எல்லா வற்றின் மீதும் ஆற்றல் பெற்றவன் ;நினைத்ததை நடத்திமுடிப்பவன் ;எல்லாமே அவனுடைய நாட்டப்படியும் அவனுடைய விதிப்படியும் நடக்கும் ;அவன் என்றும் இருந்து வருகின்றான் ,இனி என்றும் இருப்பான் ;அவனே வணங்கப்பட வேண்டியவன் அவனைத்தவிர மற்ற எவருமே வணக்கத்திற்கு உரியவர்கள் ஆகமாட்டார்கள் .இந்த முறையில் அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்ளவேண்டும் . ஈமானின் நிபந்தனைகள் எத்தனை ? ஈமானின் நிபந்தனைகள் 7 ஏழு 1. தானே விரும்பி ஈமான் கொள்வது 2.நம்மை விட்டு மறைவாக இருப்பதை ஈமான் கொள்வது 3.மறைவான விஷயங்களை அல்லாஹ் மட்டுமே அறிந்தவன் என்று உறுதியாக நம்புவது . 4.அல்லாஹுத்தஆலா எதை ஹலால் (ஆகுமானது )என்று கூறியிருக்கிறானோ அதை ஹலால் என்று அறிந்து கொள்வது. 5.அல்லாஹுத்தஆலா எதை ஹாரம் (ஆகாதது )என்று சொல்லியிருக்கிறானோ அதை ஹராம் என்று அறிந்து கொள்வது . 6. அல்லாஹ்வின் வேதனையை பற்றி பயந்து கொண்டே இருப்பது . 7.அல்லாஹ்வின் ரஹ்மத்தை (அருளை) விரும்புவது . ஈமான் நிலையாக (இருப்பதற்கான )நிபந்தனைகள் என்ன ? 1. ஈமான் கொண்டதால் மகிழ்ச்சி அடைவது . 2. ஈமான் போய்விடுமோ என்று ஆசிக் கொண்டே இருப்பது . 3. ஈமானை கெடுக்கக் கூடியவைகளை விட்டு ஒதுங்கியே இருப்பது . ஈமானினால் என்ன பலன் ? ஈமானுடன் இறப்பவர் நிரந்தரமாக வேதனையை (அதாபை )விட்டும் தப்பித்து எப்போதும் சொர்க்கத்தில் இருப்பார் Subscribe: https://bit.ly/32GrJwI Telegram: https://t.me/azeezislamicblog Facebook: https://www.facebook.com/azeezislamicblog Website: https://azeezislamicblogs.blogspot.com/ hadith #நபிமொழி #islamicquote #HadithQuotes #hadees #nabigalnayagam #nabi #islam